1330 திருக்குறள் விளக்கத்துடன் திருக்குறள் அதிகாரம் 1-38
திருக்குறள் பொருளுடன் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நூல் குறிப்பு
ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு. இந்த முப்பாலும் மேலும் ‘இயல்’ என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது.
அறத்துப்பால்
திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை
திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்
திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்
திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்
திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை
திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை
திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை
திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை
திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை
திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்
திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்
திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை
திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்
திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை
திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்
திருக்குறள் அதிகாரம் 27 – தவம்
திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்
திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை
திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை
திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை
திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை
திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை
திருக்குறள் அதிகாரம் 35 – துறவு
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்
திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்
திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்
அறத்துப்பால் அறத்துப்பாலில் மொத்தம் 4 இயல்கள் உள்ளன. இதில் முதலாவது இயல் “பாயிரவியல்”. பாயிரவியலில் மொத்தம் 4 அதிகாரங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாவது இயலாக “இல்லறவியல்” இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து “துறவறவியல்” உள்ளது. அதில் மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஊழியல்”. இதில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே. பாயிரவியல் – 4 அதிகாரங்கள் இல்லறவியல் – 20 அதிகாரங்கள் துறவறவியல் – 13 அதிகாரங்கள் ஊழியல் – 1 அதிகாரம் ஆக அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்களும் 380 பாடல்களும் உள்ளன.
"This Content Sponsored by
Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline
#buymoteshopping #buymoteapplication"
Comments
Post a Comment